
ரவுடி கணவனை வெறுத்து பிரிந்து வாழ்கிறார் சுஜாதா. மகன் சஞ்சீவை தந்தை சாயல் இன்றி நல்லவனாக வளர்க்க முயற்சிக்கிறார்.
ஆனால் சஞ்சீவ் தந்தை போல் அடிதடியில் ஈடுபடுகிறார். இதனால் மகனை ஊட்டி கான்வென்டில் சேர்க்கிறார். அங்கு தாய்க்கு கட்டுப்பட்டு அமைதியா கிறார். ஆனாலும் சீனியர் மாணவர்கள் ரோத், அபிஷேக், சைய்யது மூவரின் ராக்கிங் தொல்லைகள் ஆத்திர மூட்டுகிறது. அம்மாவை நினைத்து அடங்கிப் போகிறார். நண்பன் கார்த்திக் பள்ளி முதல்வர் மகள்ரியா ஆறுதலாக இருக்கின்றனர்.
மாணவர் பேரவை தேர்தலில் சஞ்சீவை நிற்க வைத்து ஜெயிக்க வைக்கிறார். கார்த்திக். கோபமாகும் ரோத் கோஷ்டி கார்த்திக்கை கொல்கிறது. ரியாவும் பிரிந்து வெளியூர் செல்கிறார்.
கார்த்திக் சாதாரணமாக சாகவில்லை. கொல்லபட்டார் என்ற விஷயம் தெரிகிறது. கொலைகார மாணவர்களை பழிதீர்ப்பது கிளை மாக்ஸ்....
ராகிங் கொடுமைகளை அலசி தோலுரிக்கிறது படம். ஆசிரியர் முகத்தை கோணியால் சுற்றி அடித்து நொறுக்கும் சஞ்சீவின் ஆரம்பமே பரபரக்க வைக்கிறது.
ஊட்டி கான்வெட்டின் கோட் சூட் மாணவர்கள் வித்தியா சமான பளிச். மாணவர் கவுன்சில் என்ற பெயரில் சீனியர் மாண வர்கள் செய்யும் ராகிங் செயல்கள் கொடுமை.. சஞ்சீ வின் கிராமத்தனமான செயல்களை கேலி செய்வ தில் பணக்கார சேஷ்டை. சஞ்சீவை குழி தோண்ட வைப்பது முதுகில் பிரம்பால் அடிப்பது என சீனியர்கள் நடத்தும் வன்மங்கள் கொடூரம்.
அம்மாவுக்காக எல்லாம் தாங்கி கோபங்களை உள்ளுக்குள்ளேயே அடக்கி நடிப்பில் பளிச்சிடுகிறார் சஞ்சீவ். தாய், காதலி, நண்பன் என முக்கோண பாசங்கள் விலகிப் போக இடிந்து போய் மனதில் இறங்குகிறார்.
மாணவர் தேர்தலில் சஞ்சீவ் ஜெயித்ததற்காக கார்த்திக்கை கொன்று பழி தீர்க்கும் ரோத், அபிஷேக் சைய்யது வில்லத்தனங்கள் திடுக்கிட வைக்கிறது.
மூவரையும் கிளைமாக்சில் பழிவாங்கும் சஞ்சீவின் வெறியில் அனல்....
ரியா சுட்டித்தனத்தில் கலகலப்பூட்டுகிறார் கார்த்திக் நல்ல நண்பன். ரோத், அபிஷேக், சைய்யது விறைப்பான முரட்டு குணத்தில் திகிலுட்டுகின்றனர். கான்வெண்ட் மாணவர் களின் இன்னொரு புற வாழ்க்கையை கலகலப்பும் வுறுவிறுப்புமாக படமாக்கி சபாஷ் போட வைக்கிறார் அறிமுக இயக்கனர் அனிதா உதீப்.. காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கச்சிதமாக செதுக்கியதில் டைக்டர் கை வண்ணம் பளிச்சிடுகிறது.
No comments:
Post a Comment