
கடத்தல்காரன் மனம் மாறி அத்தொழில் நடத்தும் கும்பலை போலீசில் சிக்க வைக்கும் கதை... புதுப்பட திருட்டு சி.டி. தயாரித்தல், வைரம் கடத்துதல் என சமூக விரோத காரியங்களில் ஈடுபடும் பிரபுவுக்கு விசுவாசமிக்க ஊழியர் சூர்யா. போலீசை ஏமாற்றி உள்ளூர், வெளியூர்களில் இருந்து பொருட்களை சுருட்டி வருவதில் கில்லாடி.
இவர்களுக்கு போட்டியாக முளைக்கிறான் கமலேஷ். பிரபு கோஷ்டியை வீழ்த்தி கடத்தலில் நம்பர் ஒன் ஆக பல வழிகளில் முயற்சிக்கிறான். பிரபுவுக்கு சொந்தமான வைர கற்களை ஆள் வைத்து கடத்துகிறான்.
சூர்யா புகுந்து சதிகளை தவிடு பொடுயாக்கிறார். நண்பன் வயிற்றில் போதை மருந்து வைத்து மலேசியாவுக்கு கடத்துகிறான் வில்லன். அங்கு வயிற்றிலேயே பொட்டலம் உடைய உயிருக்கு போராடுகிறான். அவனை சூர்யா காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் வில்லன் கோஷ்டி வயிற்றை கிழித்து போதை மருந்தை எடுக்கிறது. நண்பன் சாகிறான். கொலைப்பழி சூர்யா மீது விழுகிறது. அதிலிருந்து தப்புவதும் கடத்தல் கும்பலை அழிப்பதும் கிளைமாக்ஸ்.
துறு துறுவென வருகிறார் சூர்யா. விமான அதிகாரியை ஏமாற்றி வெளிநாட்டில் இருந்து புதுப்பட சி.டி.யை திருடி வரும் ஆரம்பமே அமர்க்களம்... காங்கோ நாட்டில் இருந்து வைரத்தை கடத்துவது... அதை பறித்துக் கொண்டு ஓடும் ரவுடிகளை வீட்டு மாடிகளில் விரட்டி முட்டி மோதுவது ஹாலிவுட் மிரட்டல்... விமான நிலையத்தில் அதிகாரிகள் சுற்றி வளைக்க குழந்தை சட்டையின் பின் பகுதியில் திணித்து வெளியே கொண்டு வருவது பர பர... சி.பி.ஐ. அதிகாரியிடம் மாட்டிக் கொள்ளாமல் தங்க கட்டிகளை சரக்கு ரெயிலில் ஏற்றி அனுப்பி அதிகாரியின் முகத்தில் கரி பூசுவது நச்...
நண்பன் குடும்பத்தினர் என தப்பாக நினைத்து விலை மாது வீட்டுக்குள் புகுந்து படும் அவஸ்தை கள்... மறுநாள் நிஜமாகவே நண்பன் வீட்டுக்கு போய் அங்கு இருப்பவர்களை விலை மாதர்கள் என நினைத்து வாங்கி கட்டுவது கலகலப்பு...
மலேசியா கார் சேசிங்... காங்கோ மலை உச்சியில் வில்லனோடு மோதும் சண்டை மயிர் கூச்செரிய செய்கின்றன. பிரபு கடத்தல் ஜாம்பவான் ஆக அமைதியாக மிரள வைக்கிறார். முடிவு பரிதாபம்.
தமன்னா அழகான காதலியாய் பளிச்சிடுகிறார். காதலனை கொலைகாரன் என போலீசில் மாட்டி விடுவது திருப்பம்.சூர்யாவின் நண்பனாக வரும் ஜெகன் மலேசியாவில் வயிற்றை கீறி சாகடிக்கப்பட்டு பரிதாபப்பட வைக்கிறார். கருணாஸ் காமெடியிலும், குணசித்திரத்திலும் சபாஷ். ஆகாஷ் தீப் சைகல் மிரட்டல் வில்லன். பொன்வண்ணன் சுங்க அதிகாரியாக வருகிறார்.
காட்சிகளின் பிரமாண்டம் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் இனிமை. எம்.எஸ். பிரபுவின் கேமிரா நாடு நகரெல்லாம் ஊடுருவி பிரமிக்க வைக்கிறது. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சியில் அனல்...
கடத்தல் கதையை சீடுக்ஷனுடன் விறு விறுப்பாக படமாக்கி சிறந்த இயக்குனர் பட்டியலில் நுழைந்துள்ளார் கே.வி. சீடுனந்த்.
No comments:
Post a Comment