
சிறு வயதில் தந்தையை இழந்து பண்ணையில் ஆடு மேய்த்து பிழைக்கும் விஷ்ணுவுக்கு கபடி விளையாட்டில் ஆர்வம். கிராமத்தில் கபடி விளையாடும் இளைஞர்களுக்கு எடுபிடி வேலைகள் செய்கிறார்.
ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு மதுரை யில் இருந்து வருகிறார் சரண்யா மோகன். நாய்க்கு பயந்து விஷ்ணு கையை பற்றிக் கொள்ள இருவருக்கும் காதல் துளிர்க்கிறது. திருவிழா கபடி போட்டி குழுவில் விஷ்ணு சேர்க்கப்படுகிறார். அவரின் ஆவேச அதிரடி ஆட்டம் அவ்வூருக்கு வரும் கபடி பயிற்சியாளர் கிஷோரை கவர்கிறது. திருவிழா முடிந்து சரண்யாமோகன் ஊர் திரும்புகிறார்.
அவர் ஊரில் நடக்கும் கபடி போட்டிக்கு விஷ்ணு குழுவினர் செல்கிறார்கள். அங்கு பெரிய அணிகளுடன் மோத முடியாமல் திணறு கிறார்கள். அவர்களுக்கு பயிற்சியாளராகிறார் கிஷோர். அவர் உதவி யால் விஷ்ணு அணி கோப்பையை வெல்கிறது.
ஒரு வருடத்துக்கு பின் விஷ்ணு ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு வந்து அவரை தேடுகிறார் சரண்யாமோகன். அப்போது நடப்பது இதயத்தை உலுக்கி போடும் கிளைமாக்ஸ்.
காதல், கபடியை வைத்து கிராம பின்னணியோடு உயிரோட்டமான கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். கதாபாத்திரங்களில் கிராமிய யதார்த்தம்.
வறுமையால் படிப்பை விட்டு ஆடு மேய்க்க போகும் விஷ்ணு விழிகளில் நீர் முட்ட வைக்கிறார்.
பஸ்சை முந்த வேகமாய் சைக்கிள் ஓட்டி வரும் விஷ்ணுவை சரண்யாமோகன் ரசிப்பது. கண்ணை கட்டி பானை அடிக்கும் போட்டியில் விஷ்ணுவுக்கு சரண்யா கால் கொலுசு சத்தத்தால் உதவி செய்வது கவிதை.
திருவிழாவில் மின் தடையானதும் விஷ்ணுவும் சரண்யாவும் பார்வையால் காதல் பரிமாறுவது தென்றல். இதம்....
விஷ்ணு யதர்த்தமாய் மனதில் நிறைகிறார். தாய் சாப்பிடுவதற்காக அவரிடம் பொய் சண்டை யிட்டு சாப்பிடாமல் செல்வது... தாயை பழித்த வனை ஆவேசமாய் அடித்து சாய்ப்பது முத் திரை.... கிளைமாக்சில் துடிக்க வைக்கிறார்.
சரண்யா மோகன் அழகான காதலியாய் பளிச்சிடுகிறார். பின்பாதி யில் எங்கோ ஒளிகிறார். கபடி பயிற்சியாளராக வரும் கிஷோர் விறைப்பு ஏற்றுகிறார். நண்பர்களாக வரும் வைரவன், நிதிஷ், அப்புகுட்டி, சூரி கேரக்டர்களோடு வாழ்கிறார்கள். காமெடி யிலும் நாட்டுப்புற வாசனை. செல்வகணேஷ் இசை இதயத்தை வருடு கிறது. லேசா பறக்குது மனசு பாடல் ஈர்ப்பு. லஷ்மண் ஒளிப்பதிவு கச்சிதம்
No comments:
Post a Comment