Sunday, August 23, 2009

அந்த காலத்து திரைப்படம்

அந்த காலத்து திரைப்படம் என்றால் அந்த காலத்து விஜய் அல்லது அந்த காலத்து சூர்யா வந்து உலகமே எதிர்க்கும் காதலர்களை, தன் வாதத் திறமையால் அந்த உலகம் ஸ்த்ம்பிக்கும் ”லா பாயிண்டுகள” எடுத்து விட்டு ஒரு வழியாக கத்திகளும், ரிவால்வர்களும் சோகமாகிப்போய் வன்முறை அப்பாக்கள் கையிலிருந்த நழுவ, சேர்த்து வைத்து, காதலர்களை ரயிலில் ஏற்றி விட்டு, தன் காதல் மட்டும் சக்ஸஸ் ஆகாமல் ஒன்றிரண்டு கண்ணீர் துளிகளுடன் சோகமாக ரயிலை பார்த்து ஆரம்பித்த டாட்டா சினிமா பார்க்க வந்த ரசிகர்களில் வந்து முடியும் டைரக்டோரியல் டச்சுடன் “இவரது காதல் அர்ப்பணம் தொடரும்” என்று திரையின் ஒரு பாதியை ஆக்ரமிக்கும் வாசகங்களுடன் வீட்டிற்க்கு போய் சேரும் வரை விக்கி விக்கி அழுவதற்க்கு கணிசமாக சோகத்தை பேக் செய்து கொடுக்கும் ஒரு ஃபுல் சர்வீஸ் “எண்டர்டெயின்மெண்ட்” பேக்கேஜ் இல்லை. மாறாக ஐரோப்பியர் ஒருவர் விக்டோரியா பப்ளிக் ஹாலில் கதை கத்தரிக்காய் ஒன்றும் இல்லாத ”ஓடும் குதிரைகள்” அல்லது “தவழும் பாப்பாக்கள்” அல்லது காமிராவை ஆஃப் செய்ய மறந்த பொழுது அனாவசியத்துக்கு வந்து விழுந்த மண் தரைகள், கால்கள போன்ற காட்சிகள் தான் அன்றைய தமிழ் ரசிகர்களை வசீகரித்தவைகள். இந்தப் பேரானந்தக் கொடுமையைப் பார்க்க தமிழர்கள் கலங்காமல் காசை அள்ளிக் கொடுத்தார்கள். ஐரோப்பியர் கலங்காமல் காசை அள்ளினார். இன்று ஹாண்டிகாமில் ”நல்லா விழவில்லை, அழித்துவிடுங்கள்” என்று கோபமாக மணைவி கட்டளையிடும் காட்சிகளின் தரத்தை சேர்ந்தவையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.

சாமிகண்ணு வின்செண்டும் மக்களை எண்டர்டெய்ன் பண்ணியவர்களில் ஒருவர். 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இப்படி ஒன்றும் இல்லாததெற்கெல்லாம் பரவசப்பட்டு சினிமா பார்த்து வந்த் நிலமையில் இருந்த ரசிகர்களுக்கு முன்னேற்றமாக கதையுடன் கூடிய பரவசங்களை கொடுத்தவர்கள் தான் நடராஜ முதலியார், ஆர். வெஙகையா, ஆர். பிரகாஷ், மற்றும் பலர். இரண்டாவது பத்தாண்டில் தான் ஓரளவு சினிமா டேக் ஆஃப் பண்ணியது எனலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் முப்பதுகளில் தான் சினிமா டாப் கியாருக்கு மாறியது. நாம் முன்னரே நடராஜ முதலியார் பற்றி மாவு அறைத்து விட்டோம்.

R. Vengaiah

R. Vengaiah

ரகுபதி வெங்கையாவும், ரகுபதி பிரகாஷ்ஷும் சக்கை போடு போட்ட தந்தையும் மகனும். 1914ல் கெய்ட்டி தியேட்டரை தொடங்கிய வெங்கையா மகனுடன் சேர்ந்து “கிழக்கின் நட்சத்திரம்” (Star of the East) என ஒரு ஸ்டுடியோவை நிறுவினார். வெங்கையா இந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களை வெளியிட்டார். நடராஜ முதலியாருக்கு கீச்சகவதம் என்றால் வெங்கையாவுக்கு பீஷ்மவதம். இதோ பட்டியல்:

பீஷ்மவதம் (1922)

நந்தனார் (1924)

சமுத்ர மதனம் (1923)

கஜேந்தர மோக்‌ஷம் (1924)

உஷா ஸ்வப்னா (1924)

திரௌபதி பாக்யா (1924)

மஹாத்மா கபீர்தாஸ்(1925)

R. Prakash

R. Prakash

லைலா என்ற பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்தார் பிரகாஷ். எக்கச்சக்க காசுகள் ரசிகர்கள் பைகளிலிருந்து இந்த தந்தை-மகனின் பைகளுக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தது. அண்டை நாடுகளுக்கும் இவர்கள் புகழ் கப்பலேரி போயிற்று. பணமாக உறுமாறி திரும்பி வந்தது.

பிரகாஷும் கப்பலேறினார். ஏற்கனவே காமிராமேன் ஆன பிரகாஷ் தன் திறமையை சத்தாக்க இங்கிலாந்து சென்றார். திரைப்படத் தயாரிப்பை முறையாக லண்டனில் “பேக்கர்ஸ் மோஷன் பிக்ஸ்ர்” ஸ்டுடியோவில் கற்றார். ஹாலிவுட் போனார். டி.ட்பிள்யூ. கிரிஃப்ஃபித் மற்றும் சிசில் பி டிமெல்லுடன் பணி புரிந்தார். வென்றார். வந்தார். மேலும் படங்கள் தந்தார்.

No comments:

Post a Comment